ஓமோன் வைப்பு என்பது ஓமோன் அடங்கிய ஒரு பெட்டி போன்ற ஒரு சாதனமாகும். இது பயிற்சி பெற்ற நிபுணர்களால் கையில் தோலுக்கு அடியில் வைக்கப்படுகின்றது. இது கர்ப்பமாவதை தடுப்பதற்குத் தேவையான ஓமோன்களை வெளியிடும். இச் செயற்பாடு 5 வருடம் வரை நடைபெறும். இந்த ஓமோன் வைப்பு ‘ஜடல்லே’என அழைக்கப்படும். செறுகப்பட்டதன் பிறகு தேவையான நேரத்தில் இதை அகற்றிக் கொள்ள முடியும் இச்செயன்முறை பெண்களுக்கு மாத்திரமே செய்யப்படுகின்ற ஒன்றாகும். இந்த செயன்முறையின் முதல் ஆண்டில் நாள்பட்ட ஒழுங்கற்ற மாதவிடாய், இரத்தபோக்கு என்பன ஏற்படுவது ஒரு பொதுவான சிக்கல் ஆகும்.
வாசெக்தம் என்பது ஆண்களுக்கு செய்யும் நிரந்தர பிறப்பு கட்டுப்பாட்டு சிகிச்சை முறை ஆகும். இங்கு விந்தணு விதைப் பையிலிருந்து வெளியேறுவதை தடுக்க விதைப் பையின் அருகில் செய்யும் சிறிய சிகிச்சை முறை ஆகும். விதைப் பை தொடர்ந்தும் விந்தணுக்களை உற்பத்தி செய்தாலும் அவை உடலால் மீண்டும் உறிஞ்சிகொள்ளப்படும். இந்த வாசெக்தம் சிகிச்சையின் பினனர் விதை பையில் இருந்து வெளியேற்;றப்படும் விந்து திரவத்தில் விந்தணுக்கள் உள்ளடங்கி இருக்காது. இந்த சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்படுவது மிகவும் அரிது.
ஹிஸ்டரெக்டம் என்பது பெண்களுக்கு செய்யும் நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு முறை ஆகும். இங்கு நடைபெறுவது அறுவை சிகிச்சை முறை மூலம் பெண்ணின் கர்ப்ப பையை நீக்குவதாகும்.
கருத்தடை முறைகள் பற்றி அறிந்துகொள்ள பலதரப்பட்ட வளங்கள் உள்ளன. நீங்கள் எப்பொழுதும் குடும்பத் திட்டச் சங்கத்தின் தொலைபேசி இலக்கமான 011 2555455 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்துகொள்ள முடியும். அதேவேளை குடும்ப சுகாதார தாதி அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினையும் (ஆழுர்) தொடர்பு கொள்ள முடியும்.
உங்களுக்கு உதவுவதே அவர்களின் கடமையாகும்.
http://www.fpasrilanka.org/அறுவை சிகிச்சை செய்யாமல் மாத்திரைகளைப் பயன்படுத்தி செய்யப்படுவது மருத்துவ கருக்கலைப்பு ஆகும். உங்கள் நாக்கின் கீழ் அல்லது யோனியில் வைத்துக்கொள்வதற்கு கரையும் மாத்திரைகள் இருக்கின்றன.
உங்களுக்கு இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்:
https://www.howtouseabortionpill.org/
howto/#mi
https://www.womenonweb.org/si/i-need-an-abortion
(சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன)
ஏயஉரரஅ யுளிசையவழைn என்பது ஒரு மெல்லிய குழாய் (கன்னூலா) பயன்படுத்துவதை உள்ளடக்கியது. இது ஒரு போத்தல் மற்றும் ஒரு பமப்;புடன் குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மென்மையான வெற்றிடத்தை வழங்குகிறது. கன்னூலா கருப்பையில் செலுத்தப்படுவதன் ஊடாக பம்ப் இயங்குகின்றது. இதனால் திசு மெதுவாக கருப்பையிலிருந்து அகற்றப்படுகிறது. மருத்துவ அல்லது அறுவைசிகிச்சை கருக்கலைப்புகள் பாதுகாப்பானவை.
ஒரு குழந்தையை முழு காலத்திற்கு கொண்டு செல்வதை விட மிகவும் பாதுகாப்பானதாக அறியப்படுகிறது.